பள பள கூந்தலுக்கு:வறட்சியால முடியோட பளபளப்பும் குறைஞ்சிரும். இதுக்கு வென்னீல 3 டீஸ்பூன் வெந்தயத்தூள்,1 டீஸ்பூன் தயிர், 3 டீஸ்பூன் தயிர் இது மூன்றயும் சேர்த்து தலைக்கு குளிச்சிட்டு வந்தா ' போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோடுங்கிற கதையா திரும்பவும் முடி பளபளக்கும்.
சிலருக்கு தூங்கி எந்திரிக்கிறப்போ, கொத்து கொத்தா தலையணையில முடிகள் விழுந்திருக்கும். தலைல சீப்பை வச்சாலோ, வேரோட உதிரும். இந்த பிரச்சினை இருக்கிறவங்க, தினமும் நைட் தூங்கப் போறதுக்கு முன்னால ஆலிவ் எண்ணெய கொஞ்சோண்டு எடுத்து தலைல நல்லா மசாஜ் செஞ்சுட்டு சீப்பு வச்சு தலைய சீவி, நுனி வரை பின்னல் போட்டுகிட்டு வரனும். முடி உதிர்வது குறையும்.
முடி ரொம்ப பிளவுபட்டிருந்தால் :100 மில்லி தேங்காய் எண்ணெய்ல கொஞ்சோண்டு ஓமத்தை போட்டு காய்ச்சி, தலைல நல்லா தேய்ச்சு சீப்பு வச்சி தலையை வாரிரனும். ஓமம் சேர்க்கிறது கூந்தலை பாதுகாக்கிறதோட, சளி பிடிக்கிறதயும் தடுக்கும்.
முடி பிளவு, சொட்டையாவதை தடுக்க:
அடிக்கடி வெறும் தலைக்கு குளிக்கிறதை முதல்ல தவிர்க்கனும். அரை டீஸ்பூன் விளக்கெண்ணெய சின்ன கிண்ணத்தில ஊத்தி, அத அப்டியே கொதிக்கிற தண்ணி மேல வச்சு, சூடு பறக்க தலைல தேய்க்கனும். அப்றமா, சுத்தமான சீப்பு வச்சு சீவனும். தினமும் இப்டி செஞ்சா, வகிடு பகுதில அகலம் கொறஞ்சு நெருக்கமா முடி வளர ஆரம்பிக்கும்.
Sunday, January 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
Well, ...
ReplyDeleteஃபேஷன் புகைப்படம்