Sunday, January 3, 2010

ப‌ள ப‌ள‌ கூந்த‌லுக்கு

ப‌ள ப‌ள‌ கூந்த‌லுக்கு:வ‌ற‌ட்சியால‌ முடியோட‌ ப‌ள‌ப‌ள‌ப்பும் குறைஞ்சிரும். இதுக்கு வென்னீல‌ 3 டீஸ்பூன் வெந்தய‌த்தூள்,1 டீஸ்பூன் த‌யிர், 3 டீஸ்பூன் த‌யிர் ‍ இது மூன்ற‌யும் சேர்த்து த‌லைக்கு குளிச்சிட்டு வ‌ந்தா ' போன‌ ம‌ச்சான் திரும்பி வ‌ந்தான் பூ ம‌ண‌த்தோடுங்கிற‌ க‌தையா திரும்ப‌வும் முடி ப‌ள‌ப‌ள‌க்கும்.
சில‌ருக்கு தூங்கி எந்திரிக்கிற‌ப்போ, கொத்து கொத்தா த‌லைய‌ணையில‌ முடிக‌ள் விழுந்திருக்கும். த‌லைல‌ சீப்பை வ‌ச்சாலோ, வேரோட‌ உதிரும். இந்த‌ பிர‌ச்சினை இருக்கிற‌வ‌ங்க‌, தின‌மும் நைட் தூங்கப் போற‌துக்கு முன்னால ஆலிவ் எண்ணெய கொஞ்சோண்டு எடுத்து த‌லைல‌ ந‌ல்லா ம‌சாஜ் செஞ்சுட்டு சீப்பு வ‌ச்சு த‌லைய‌ சீவி, நுனி வ‌ரை பின்ன‌ல் போட்டுகிட்டு வ‌ர‌னும். முடி உதிர்வ‌து குறையும்.
முடி ரொம்ப‌ பிள‌வுப‌ட்டிருந்தால் :100 மில்லி தேங்காய் எண்ணெய்ல‌ கொஞ்சோண்டு ஓம‌த்தை போட்டு காய்ச்சி, த‌லைல‌ ந‌ல்லா தேய்ச்சு சீப்பு வ‌ச்சி த‌லையை வாரிர‌னும். ஓம‌ம் சேர்க்கிற‌து கூந்த‌லை பாதுகாக்கிற‌தோட‌, ச‌ளி பிடிக்கிற‌த‌யும் த‌டுக்கும்.
முடி பிள‌வு, சொட்டையாவ‌தை த‌டுக்க‌:
அடிக்க‌டி வெறும் த‌லைக்கு குளிக்கிற‌தை முத‌ல்ல‌ த‌விர்க்க‌னும். அரை டீஸ்பூன் விள‌க்கெண்ணெய‌ சின்ன‌ கிண்ண‌த்தில‌ ஊத்தி, அத‌ அப்டியே கொதிக்கிற‌ த‌ண்ணி மேல‌ வ‌ச்சு, சூடு ப‌ற‌க்க‌ த‌லைல‌ தேய்க்க‌னும். அப்ற‌மா, சுத்த‌மான‌ சீப்பு வ‌ச்சு சீவ‌னும். தின‌மும் இப்டி செஞ்சா, வ‌கிடு ப‌குதில‌ அக‌ல‌ம் கொறஞ்சு நெருக்க‌மா முடி வ‌ள‌ர‌ ஆர‌ம்பிக்கும்.

Friday, January 1, 2010

முடி கருக‌ருன்னு வ‌ள‌ர‌னுமா:


த‌லை முடி க‌ருப்பாக‌ இருக்க‌னும்னா, நெற‌ய‌ புர‌த‌ம், இரும்புச‌த்து இருக்கிற‌ உண‌வுக‌ளை சேர்த்துக்க‌னும். செம்ப‌ட்டை முடிக்கு பார்ல‌ரில் என்ன‌ சிகிச்சை :1. த‌லையில் ந‌ல்லா எண்ணெய் த‌ட‌விட்டு, ம‌ருதாணி, பெரிய‌ நெல்லிக்காய் ஜூஸ், டீ டிகாஷ‌ன், முட்டையோட‌ வெள்ளைக்க‌ரு இத‌யெல்லாம் சேர்த்து செஞ்ச‌ பேக்‍ஐ ரெடியா வ‌ச்சிக்குவாங்க‌.2. த‌லைல ந‌டுல இருந்து கொஞ்சம் முடியை எடுத்து த‌லைமுடில‌ ந‌ல்லா ப‌டுற‌ மாதிரி த‌ட‌வுவாங்க‌.3. இப்டி கொஞ்ச‌ம் கொஞ்ச‌மா வ‌ல‌துப‌க்க‌மும், இட‌து ப‌க்க‌மும் இந்த‌ பேக்‍ஐ முடில‌ த‌ட‌வி சுத்துவாங்க‌.4. கொஞ்ச‌ நேர‌த்துக்கு அப்ற‌மா, த‌லை முடியை த‌ண்ணீல‌ அல‌சுவாங்க‌. க‌ன்டிஷ‌ன‌ர் போட்டு ஒருத‌ட‌வை அலசுவாங்க‌.5. ஹேர் டிரைய‌ரால உல‌ர்த்துவாங்க‌. தொட‌ர்ந்து இந்த‌ மாதிரி செஞ்சுட்டு வ‌ந்தா, முடி க‌ருக‌ருன்னு ஆயிரும்.
இதுக்கு வீட்டில் என்ன‌ சிகிச்சை :1. தேங்காய் பால் கூட‌ க‌ருவேப்பிலையை ந‌ல்லா ம‌சிய‌ அரைச்சி, அதை த‌லையில‌ ஊற‌ வைச்சு, அப்ற‌மா த‌லைமுடியை அல‌சிருங்க‌ ! இதை தொடர்ந்து செஞ்சிட்டு வ‌ந்தா த‌லை முடி க‌ருக‌ருன்னு பளப‌ள‌ப்பா இருக்கும்.2. க‌றிவேப்பிலை, பெரிய‌ நெல்லிக்காய் ரெண்ட‌யும் த‌ண்ணீர் விட்டு மையா அரைச்சு, அதில‌ இருந்து ஜூசை எடுக்க‌னும். ஒரு த‌ம்ள‌ர் ஜூசுக்கு ஒரு ட‌ம்ள‌ர் தேங்காய் எண்ணெய் சேர்த்து, அடுப்பில‌ வ‌ச்சு காய்ச்சனும். ப‌ச்சை க‌ல‌ர்ல‌ ந‌ல்லா காய்ஞ்ச‌ எண்ணெய் ந‌ம்ம‌ளுக்கு கிடைக்கும். இதை த‌லையில‌ தொடர்ந்து த‌ட‌விட்டு வ‌ந்தா , முடி க‌ருக‌ருன்னு மாறுற‌தோட‌ ந‌ல்லா வ‌ள‌ர‌வும் செய்யும்.